ஆப்கானிஸ்தானில் பெரு வெள்ளம்: 33 பேர் பலி.

by Staff / 15-04-2024 11:46:59am
ஆப்கானிஸ்தானில் பெரு வெள்ளம்: 33 பேர் பலி.

ஆப்கானிஸ்தானில் மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த திடீர் வெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளதாக அரசின் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். நாட்டின் 34 மாகாணங்களில் சுமார் 20 மாகாணங்களில் கனமழை பெய்துள்ளது. சுமார் 600 வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த வெள்ளத்தில் சில வாகனங்களும் அடித்து செல்லப்பட்டன. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via