தூத்துக்குடியில் தி.மு.க. வட்டச்செயலாளர்  நள்ளிரவில் குத்தி படுகொலை: 2 பேர் கைது

by Editor / 07-08-2021 04:16:00pm
தூத்துக்குடியில் தி.மு.க. வட்டச்செயலாளர்  நள்ளிரவில் குத்தி படுகொலை: 2 பேர் கைது



தூத்துக்குடியில் தி.மு.க. வட்டச்செயலாளர் நள்ளிரவில் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்தவர் நடராஜன். இவர் 45-வது வட்ட தி.மு.க. செயலாளராக உள்ளார். மேலும் ராமசாமிபுரத்தில் சொந்தமாக ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார்.


தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியில் உள்ள முனியசாமி கோவில் கொடை விழா நடந்தது. இதில் கலந்துகொண்ட நடராஜன், கோவில் கொடை விழாவில் ஆடிக் கொண்டிருந்த சில இளைஞர்களை கோவிலிலிருந்து வெளியே போக சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் கோவிலில் வைத்து இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.


இந்த நிலையில் கோவில் கொடை விழா முடிந்ததும் இரவு சுமார் 2 மணியளவில் நடராஜன் ராமசாமிபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்திற்கு நண்பர் அருணுடன் போய் கொண்டிருந்தார். அப்போது பின்தொடர்ந்து சென்ற இளைஞர்கள் நடராஜனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது நடராஜன் மீது செங்கலை வீசியும் கத்தியால் குத்தி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பினர்.தகவலறிந்த தென்பாகம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


கொலை தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் அருண்குமார், கார்த்திக் என்ற 2 இளைஞர்களை கைது செய்தனர். இந்த கொலை தொடர்பாக சிலரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via