கூலிப்படையை ஏவி சொத்துக்காக தந்தையை கொலைசெய்த மகள்,மருமகன்,உள்ளிட்ட 4 பேர் கைது.

by Editor / 11-05-2022 08:33:30am
 கூலிப்படையை ஏவி சொத்துக்காக தந்தையை கொலைசெய்த  மகள்,மருமகன்,உள்ளிட்ட 4 பேர் கைது.

தென்காசி மாவட்டம்  இலஞ்சியில் இருந்து செங்கோட்டை செல்லும் சாலையில் இலஞ்சி பகுதியை சேர்ந்த கோட்டை மாடன் என்பவர் அவருக்கு சொந்தமான மாந்தோப்பில் கழுத்தை நெரித்து அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்ததுள்ளார். இவர் தென்காசியில் உள்ள மஞ்சள் பள்ளியில் ஓய்வு பெற்ற காவலாளி  என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கோட்டை மாடன் கொலை செய்தது குறித்து குற்றாலம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார் என்பது காவல்துறையினர் தற்போது அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர் மேலும் இந்த சம்பவம் குறித்து துணை கண்காணிப்பாளர் மற்றும் குற்றாலம் காவல் ஆய்வாளர் தாமஸ் காவல் ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் விசாரணையில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் கொலை தொடர்பாக தனிப்படை அமைத்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த கொலை சொத்துக்காக நடந்ததும் இதில் 3வது மகள்தேவி காளி செல்வம்,மூத்த மருமகன் பரமசிவம்,மற்றும் கூலிப்படையை சேர்ந்த வசந்தகுமார், மகேஸ் ஆகிய 4பேர் ஈடுப்பட்டதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் 4பேரை கைது செய்தனர்.

 கூலிப்படையை ஏவி சொத்துக்காக தந்தையை கொலைசெய்த  மகள்,மருமகன்,உள்ளிட்ட 4 பேர் கைது.
 

Tags : Four people have been arrested, including a daughter and son-in-law who killed their father for mercenary avi property.

Share via