மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை

by Staff / 04-05-2024 04:44:29pm
மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை

ராமநாதபுரம் ‘தாயுமானவர் கோவில்’ பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், சரண்யா தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கொத்தனார் வேலை செய்யும் பன்னீர்செல்வத்திற்கும் அவரது மனைவி சரண்யாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று மது போதையில் இருந்த அவர், சரண்யாவை கொலை செய்துவிட்டு பன்னீர்செல்வம் கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த கேணிக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via