சாலை விபத்து.. தந்தை மகன் பலி

உத்தரப் பிரதேசத்தில் ந்டந்த சாலை விபத்தில் தந்தை மற்றும் மகன் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரியில் வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த கோர விபத்தில் தந்தையும் பத்து வயது மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :