இந்தியா - பாகிஸ்தான் போட்டி மழையால் நிறுத்தம்

by Staff / 02-09-2023 04:06:41pm
இந்தியா - பாகிஸ்தான் போட்டி மழையால் நிறுத்தம்

மழை காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. இலங்கை பல்லகெல்லேவில் இந்த போட்டி நடைபெறுகிறது. இந்திய அணி 4.2 ஓவர்களில் 15 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. ரோகித் ஷர்மா 18 பந்துகளுக்கு 11 ரன்களும், சுப்பன் கில் 8 பந்துகள் ஆடி ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் உள்ளனர்.

 

Tags :

Share via