கேஸ் சிலிண்டர் வெடித்து எரிந்ததில் பெண் பலி

by Staff / 22-09-2022 12:26:00pm
கேஸ் சிலிண்டர் வெடித்து எரிந்ததில் பெண் பலி

பாலக்காடு திரிதாலாவில் கேஸ்சிலிண்டர் வெடித்து பலத்த தீக்காயங்களுடன் பெண் உயிரிழந்தார். அப்துஸ் சமத என்பவரின் மனைவி ஷெரீனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.நேற்று காலை எட்டு மணியளவில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் இந்த விபத்து நடந்துள்ளது. சமையல் செய்யும் போது வீட்டின் சமையலறையில் இருந்த எரிவாயு பிளக் வெடித்து சிதறியது.

இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்தனர். அப்துஸ் சமத், அவரது மனைவி ஷெரீனா மற்றும் அவர்களது மகன் ஆகியோர் தீக்காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக திருச்சூர் மருத்துவக் கல்லூரி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி ஷெரீனா உடல்நிலை மோசமடைந்ததால் உயிரிழந்தார். சம்பவத்தின் போது அப்துஸ் சமத்தின் தாயும் மகளும் உடனிருந்த போதிலும் அவர்களுக்கு காயம் ஏற்படவில்லை. பட்டாம்பி தீயணைப்பு படையினர் வீட்டிற்கு வந்து தீயை அணைத்தனர்.கேஸ் சிலிண்டர் வெடித்ததற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. சிலிண்டரின் காலாவதி உள்ளிட்டவை சரிபார்க்கப்பட்டன.

 

Tags :

Share via