செப். 15 முதல் 4 நட்களுக்கு பொதுக்கூட்டங்கள் - இபிஎஸ்

by Staff / 03-09-2023 03:47:47pm
செப். 15 முதல் 4 நட்களுக்கு பொதுக்கூட்டங்கள் - இபிஎஸ்

அண்ணாவின் 115வது பிறந்தநாள் மற்றும் மதுரையில் நடந்த பொன்விழா நிறைவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்களின் சாராம்சங்களை விளக்கி, வரும் செப். 15ம் தேதி முதல் செப். 19ம் தேதி வரை அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணாவின் 115-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 15. 9. 2023, 16. 9. 2023, 17. 9. 2023 மற்றும் 19. 9. 2023 ஆகிய நான்கு நாட்கள், `அண்ணாவின் 115-ஆவது பிறந்த நாள் விழா மற்றும் 20. 8. 2023 அன்று மதுரையில் நடைபெற்ற கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் சாராம்சங்களை விளக்கிடும் பொதுக்கூட்டங்கள்' கட்சியின் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டம், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

 

Tags :

Share via