ஈராக்கை செந்நிற போர்வையால் போர்த்தியது போல் வீசிய மணல் புயல்
ஈராக்கை செந்நிற போர்வையால் போர்த்தியது போல் வீசிய மணல் புயலால் தலைநகர் பாக்தாத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. எதிர் வரும் வாகனங்கள் புலப்படாத வகையில் மணல் புயல் வீசியது. ஐந்து மாதங்களுக்கு மேலாக ஈராக்கில் மணல் புயல் வீசி வருவதால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சுவாசக்கோளாறு சரும பிரச்சனைகளுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொளுத்தும் வெயிலுடன் மணல் புயலும் சேர்ந்து வீசுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
Tags :