விடிய விடிய சீரமைப்பு பணிகள் 2 உடல்கள் மீட்பு.

by Editor / 04-06-2023 10:01:11am
விடிய விடிய சீரமைப்பு பணிகள் 2 உடல்கள் மீட்பு.

ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பஹானாகா ரயில் நிலையத்தில் விடிய விடிய சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விபத்தில் சிக்கிய பெட்டிகளை ரயில்வே ஊழியர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர். அப்போது மேலும் 2 உடல்கள் மீட்டுள்ளனர். மேலும், உருக்குலைந்த ரயில் பெட்டிகளில் இன்னும் சில உடல்கள் சிக்கியிருக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories