அரசு பேருந்து மீது வேன் மோதி 2பேர் பலி.2 காளைகளும் பலி.

by Editor / 17-01-2023 07:44:22pm
அரசு பேருந்து மீது வேன் மோதி 2பேர் பலி.2 காளைகளும் பலி.

புதுக்கோட்டை, திருவரங்குளம் அருகே அரசு பேருந்து மீது வேன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு காளைகளை ஏற்றிச் சென்ற வேன் மீது பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். வன்னியன் விடுதிக்கு ஜல்லிக்கட்டு காளைகளை இறக்கிவிட்டு மீண்டும் காளைகளை ஏற்றிக்கொண்டு திரும்பியபோது விபத்து ஏற்பட்டுள்ளது. விராலிமலை நோக்கி சென்ற வேன் மீது பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழந்தும், 2 காளைகள் உயிரிழந்துள்ளது.புதுக்கோட்டை ஆலங்குடி அருகே உள்ள வன்னியன்விடுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. 590 காளைகள் களம் கண்ட நிலையில் 24 பேர் காயம் அடைந்துள்ளனர். 9 பேர் மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவன்மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

Tags :

Share via