தற்கொலைக்கு தூண்டிய பாஜக எம் எல் ஏ
பெங்களூரை சேர்ந்தவர் தொழிலதிபர் எஸ்.பிரதீப். இவர் ஞாயிற்றுக்கிழமை அன்று நெட்டிகெரே அருகே காரில் இறந்து கிடந்தார். துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொன்றதாக தெரிந்தது. அதுகுறித்து காவல்துறையினர் நடத்திய அதிரடி விசாரணையில் கோபி, சோமையா ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், பிரதீப் ரூ.1.2 கோடியை கிளப்பில் முதலீடு செய்ததாகவும், கிளப்பில் பணிபுரிவதற்காக சம்பளத்துடன் கூடுதலாக ஒவ்வொரு மாதமும் ரூ.3 லட்சம் தருவதாக உறுதியளித்துள்ளனர். ஆனால் அவர்கள் பேசிய பணத்தை கொடுக்க மறுத்துவிட்டனர். மேலும் அவரது முதலீட்டைத் திரும்பக் கொடுக்கவும் மறுத்துவிட்டனர்.
எனவே இது குறித்து எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவலியின் கவனத்திற்கு கொண்டு சென்றார் பிரதீர். எம்எல்ஏ அவர்களை அழைத்து பேசியதல் ரூ.90 லட்சம் தருவதாக ஒப்புக்கொண்டனர். ஆனால் எம்.எல்.ஏவும் பணம் கிடைக்க உதவாததால், தன்னை துன்புறுத்துவதாக கூறி பிரதீர் தற்கொலை செய்து கொண்டார். அந்த தற்கொலைக் குறிப்பில் பாஜக எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவலியுடன் சேர்ந்து 6 பேரின் பெயர்களையும் எழுதியுள்ளார்.
Tags :