சிலியில் எரிவாய்வு கிடங்கில் பயங்கர தீ விபத்து

by Admin / 14-02-2022 12:29:11pm
சிலியில் எரிவாய்வு கிடங்கில் பயங்கர தீ விபத்து

சட்டவிரோதமாக இயங்கி வந்த எரிவாயுக் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக 1500க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

லெஸிஸ்டரென  மாவட்டத்தில் உள்ள எரிவாயுக் கிடங்கில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது இதுபற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கொழுந்து  விட்டு எரியும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பகுதியில் உள்ள இரண்டு சாலைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

மேலும் 3 பேர் அந்த எரிவாயுக் கிடங்கில் சிக்கியிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன

 

Tags :

Share via