19 மாவட்டங்களுக்கு மழை கொட்டோ கொட்டு என்று பெய்யப்போகிறது-.சென்னை வானிலை மையம்

by Staff / 28-09-2024 09:10:22pm
19 மாவட்டங்களுக்கு மழை கொட்டோ கொட்டு என்று பெய்யப்போகிறது-.சென்னை வானிலை மையம்

தமிழக பகுதிகளில் மேல் ஒரு வலிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று செப்டம்பர் 28 முதல் அக்டோபர் மாதம் நாலாம் தேதி வரையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது மழை பெய்யக்கூடும் .

செப்டம்பர்- 28 கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் நீலகிரி,திருப்பூர்,, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி ,கன்னியாகுமரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர்,, திருச்சி, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு

நாளை செப்டம்பர் 29 கோயமுத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ,மதுரை, விருதுநக,ர் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஓர் இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் நாளை மறுநாள் செப்டம்பர் 30 கோயம்புத்தூர் மாவட்டம் மலைப்பகுதிகள் நீலகிரி, திருப்பூர் ,தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அக்டோபர் மாதம் 3 மற்றும் 4ஆம் தேதி வரையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் இருக்கக் கூடும் என்றும் தமிழக கடலோரப் பகுதிகளில்  செப்டம்பர் 28 முதல் 30 வரை மன்னார் வளைகுடா தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு ஐந்து முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும்.

அரபிக்கடல் பகுதியில் இன்று செப்டம்பர் 28 தென்மேற்கு அரபிக் கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபி பகுதிகள் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசப்படும் தென்மேற்கு அரபிக் கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் இன்று செப்டம்பர் 28 முதல் அக்டோபர் மாதம் நாலாம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 km வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும் கேரளா கடலூர் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகள் இன்று செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை சூறைக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் ஆகையால் மேற்குறிப்பற்ற நாட்களில் மீனவர்கள் இப்பதிக்கு செல்ல வேண்டாம் என்றுசென்னை வானிலை மையம்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via