15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை குற்றவியல் ஆவணங்கள், டிஜிட்டல் பதிவுகள் சிக்கியத்தக்க தகவல்.

by Editor / 11-04-2025 10:50:14pm
15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை குற்றவியல் ஆவணங்கள், டிஜிட்டல் பதிவுகள் சிக்கியத்தக்க தகவல்.


சென்னை, கோவை மாதிரியான ஏகப்பட்ட இடங்களில் செயல்படும் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம், அதன் ஊழியர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அந்நிறுவனத்தின் இயக்குநரும், அமைச்சர் கே.என்.நேரு மகனும், பெரம்பலூர் தி.மு.க., எம்.பி.,யுமான அருண் நேரு வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

திருச்சி தில்லை நகரில் உளள அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் பலமணி நேரம் சோதனை நடத்தினர். நேருவின் குடும்பத்தினர் காற்றாலை மின் உற்பத்தியிலும் ஈடுபட்டுள்ளனர்.இந் நிலையில்   அமலாக்கத்துறை எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது.

 அதில், சோதனையின் போது  சென்னை, திருச்சி மற்றும் கோயமுத்தூர் ஆகிய இடங்களில் 2002ம் ஆண்டின் PMLA பணபரிமாற்ற சட்டத்தின் படி M/s Truedom EPC India Pvt Ltd மற்றும் அதன் முக்கிய பணியாளர்களுடன் தொடர்புடைய 15 இடங்களில் ஏப்.7ம் தேதி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

சோதனை நடவடிக்கைகளின் போது, பல்வேறு குற்றவியல் ஆவணங்கள், டிஜிட்டல் பதிவுகள் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.என பதிவில் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.

 

Tags : 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை குற்றவியல் ஆவணங்கள், டிஜிட்டல் பதிவுகள் சிக்கியத்தக்க தகவல்.

Share via