வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து சத்யபிரதா சாஹூ ஆலோசனை

by Staff / 09-05-2024 01:03:39pm
வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து சத்யபிரதா சாஹூ ஆலோசனை

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து இன்று பிற்பகல் 3 மணிக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசனை மேற்கொள்கிறார். 7 கட்டங்களாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு, புதுச்சேரிக்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்த நிலையில், ஜுன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதால், தமிழகத்தின் அனைத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடனும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசனை நடத்துகிறார்.

 

Tags :

Share via