பாஜக பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல்.காவல்துறை விசாரணை.

by Editor / 09-05-2024 10:43:29am
பாஜக பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல்.காவல்துறை விசாரணை.

 திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் மது என்ற மதுசூதனன். இவர் பாஜகவில் முன்பு மாவட்ட அளவிலான  பொறுப்பில் இருந்துள்ளார்.இவரை குடவாசல் அகரஓகை என்ற பகுதியில் ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் நேற்று இரவு சரமாரியாக வெட்டி சென்றுள்ளனர். உடனடியாக அவர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
பிறகு, தொடர்ந்து தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மதுசூதனன் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : பாஜக பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல்.காவல்துறை விசாரணை.

Share via