‘நாங்கள் எப்போதும் ஏழைகளின் பக்கம்’ - ராகுல் காந்தி

by Staff / 10-05-2024 03:10:23pm
‘நாங்கள் எப்போதும் ஏழைகளின் பக்கம்’ - ராகுல் காந்தி

தெலங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டம் நர்சாபூர் மற்றும் ஐதராபாத் சரூர் நகர் ஆகிய இடங்களில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடி, கோடீஸ்வரர்களை மேலும் பணக்காரர்களாக மாற்றுவார். ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், ஏழைகளை கோடீஸ்வரர்களாக மாற்றுவோம். நாங்கள் எப்போதும் ஏழைகளின் பக்கம் தான் நிற்கிறோம். ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் இந்தியா முழுவதும் 30 லட்சம் அரசு காலிப் பணியிடங்களை நிரப்புவோம்” என கூறினார்.

 

Tags :

Share via