2 பெண்களை கல்லால் அடித்த மர்ம ஆசாமிகள்

by Staff / 16-05-2024 01:20:44pm
2 பெண்களை கல்லால் அடித்த மர்ம ஆசாமிகள்

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா புனவாசிப்பட்டியை சேர்ந்தவர் சரண்யா (29). இவர் நேற்று முன்தினம் (மே 14) தனது அத்தை இளஞ்சியம் என்பவருடன் தனது வீட்டின் முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கல்லால் அடித்து விட்டு சென்று விட்டனர். இதில் காயமடைந்த சரண்யா, இளஞ்சியம் ஆகிய இருவரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று போலீசில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via