முரண்பாடுகளை பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் பாகிஸ்தான் ராணுவ தளபதி

by Staff / 03-04-2022 12:37:31pm
முரண்பாடுகளை பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் பாகிஸ்தான் ராணுவ தளபதி

இந்தியாவுடனான முரண்பாடுகளை பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல்  பாஜ்வா தெரிவித்துள்ளார்.

இந்தியா சீனா இடையே எல்லைப் பிரச்சனை நீடிக்கும் நிலையில் அது பாகிஸ்தானுக்கு மிகவும் கவலை அளிப்பதாக அவர் தெரவித்துள்ளார்.

கடந்த ஒரு ஆண்டாக இந்தியா பாகிஸ்தான் இடையே உள்ள எல்லை கட்டுப்பாடு துப்பாக்கி சத்தம் ஏதும் இல்லாமல் அமைதி நீடித்து வருகிறது.

இந்தியா பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை மூலம் அரசாங்க உறவுகள் மூலமும் தீர்வு காண தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

உக்ரேன் மீதான போர் மிகப்பெரிய துயரமான நிகழ்வு என்றும் போரை  உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் பாகிஸ்தான் ராணுவ தளபதி வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via