1,500 லஞ்சம் வாங்கிய நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் கைது

by Staff / 12-07-2024 02:41:27pm
1,500 லஞ்சம் வாங்கிய நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் கைது

விருதுநகர் மாவட்டம்  ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் உணவு பாதுகாப்பு அலுவலராக சந்திரசேகரன் (58). பணிபுரிந்து வருகிறார். இவர் ஜூன் 18ஆம் தேதி குருசாமி (48) என்பவரது பெட்டிக்கடையில் சோதனைக்கு சென்றார். அக்கடைக்கு உணவு பாதுகாப்பு சான்றிதழ் இல்லாதது தெரியவந்தது. சான்றிதழ் வழங்குவதற்காக முதலில் ரூ.7,500 லஞ்சம் கேட்டு பின்னர் ரூ.1,500 தருமாறு கூறியுள்ளார். இதுகுறித்து புகாரளிக்கப்பட்டது. பணத்தை வாங்கும் போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர்.

 

Tags :

Share via