பள்ளி மாணவிக்கு சட்ட விரோத கருக்கலைப்பு - மருத்துவர் கைது
நீலகிரியில் 17 வயது பள்ளி மாணவி கர்ப்பமாகியுள்ளார். இதனை கலைப்பதற்காக மருத்துவர் ஒருவரிடம் ஆலோசனைப் பெற்று அங்கிருந்து மருந்துக் கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார். இதனால், மாணவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையறிந்த போலீசார் கருக்கலைப்பிற்கு பரிந்துரை செய்த மருத்துவர் மற்றும் மாத்திரை கொடுத்த மருந்துக் கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், மாணவியின் கர்பத்திற்கு காரணமாக சக மாணவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags :