உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தோற்றம் பரவல் அதிகரித்து வருவதால் பொது இடங்களில் மாஸ்க் அணிவது மீண்டும் கட்டாயமானது

by Staff / 18-04-2022 04:53:21pm
உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தோற்றம் பரவல் அதிகரித்து வருவதால் பொது இடங்களில் மாஸ்க் அணிவது மீண்டும் கட்டாயமானது

 உத்தரபிரதேசத்தில் பாதிப்புகள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு சில நகரங்களில் பொது இடங்களில் மாஸ்க் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பரவல் கட்டுக்குள் இருப்பதாக கூறி மாநிலம் முழுவதும் கடந்த 1ம் தேதி முதல் மாஸ்க் அணிவதிலிருந்து பொதுமக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது .ஆனால் தற்போது சில நகரங்களில் மீண்டும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் காசியாபாத் ஹாபுர் மீரட் புலன்கஸ்ர் பக்பட  உள்ளிட்ட நகரங்களில் கௌதம புத்தா நகர் மாவட்டத்திலும் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.

 

Tags :

Share via