ஓடிஸ் சூறாவளியால் 27 பேர் உயிரிழப்பு

by Staff / 27-10-2023 11:15:33am
ஓடிஸ் சூறாவளியால் 27 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையைத் தாக்கிய மிக வலிமையான புயல்களில் ஒன்று ஓடிஸ். மெக்சிகோவில் ஓடிஸ் சூறாவளி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூறாவளிக்கு இதுவரை மெக்சிகோ நாட்டில் 27 பேர் பலி மற்றும் 4 பேரை காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து சூறாவளி காற்றின் தாக்கத்தினால் அகாபுல்கோ பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகள் இடிந்து விழுந்தன. இன்னும் சில பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் அவதிப்படுகின்றனர்.

 

Tags :

Share via