ஜெயகுமார் மரண வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவு

by Staff / 23-05-2024 12:11:56pm
ஜெயகுமார் மரண வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவு

நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயகுமார் மரண வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். கடந்த 4-ம் தேதி ஜெயகுமார் தோட்டத்தில் அவரது உடல் பாதி எரிந்த நிலையில் போலீசார் மீட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால், இந்த வழக்கில் எந்த ஒரு துப்பும் கிடைக்காததால் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via