சாத்தூரில் பழைமையான தொல்லியல் தடயங்கள்

by Editor / 09-08-2021 08:34:37pm
சாத்தூரில் பழைமையான தொல்லியல் தடயங்கள்

 

விருதுநகர்மாவட்டத்தில் பல்வேறு இடங் களில்தொல்லியல் சான்றுகள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகின்றன. தற்போது சாத்தூர் வைப்பாறுஅருகே 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையானதொல்லியல் மேடு கண்டறியப்பட் டுள்ளது.


இதுகுறித்து, சாத்தூர் எஸ்.ராமசாமி நாயுடு ஞாபகார்த்தகல்லூரியின் விலங்கியல் துறை உதவிப் பேராசிரியரும்தொல்லியல் ஆய்வாளருமான பா.ரவிச்சந்திரன் கூறியதாவது: சாத்தூர் பகுதியானது பண்டைக்காலம் தொட்டே சாத்தனூர் என்றேஅழைக்கப்பட்டு வந்துள்ளது என்பதை முற்காலப் பாண்டியவேந்தன், மாற வல்லபனின் காலத்தைச்சேர்ந்த கி.பி. 823 ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்றின் மூலம் அறிய முடிகிறது . அக்கல்வெட்டில் இருன்சோ நாட்டுச் சாத்தனூர் என்ற பெயர் காணப்படுவதில் இருந்து இவ்வூரின் தொன்மையை அறிய முடியும் .

இப்பகுதியில் சங்க காலம் முதல் மக்கள் வாழ்ந்த தடயங்களான தொல்லியல் மேடுகள் , முதுமக்கள் தாழிகள் , கல்வெட்டுகள் ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளன .

அண்மையில் , சாத்தூர் வைப்பாற்றின் குறுக்கே உள்ள ரயில்வே பாலத்துக்கு அருகில் வைப்பாற்றுக்கு தெற்கே உயரமான , தொல்லியல் மேடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது . தொல்லியல் மேட்டின் ஊடாக ரயில்வே பாதை செல்கிறது .


இப்பகுதியில் சிதிலமடைந்த பானை ஓடுகள் இருந்த இடத்தை களஆய்வு செய்தபோது பழங்கால மக்கள் பயன்படுத்திய நுண் கருவிகள் , கருப்பு , சிவப்பு பானை ஓடுகள் , குறியீட்டுடன் கூடிய பானை ஓடுகள் , குறுகிய துளை யுடைய நீர்க்குடுவை மற்றும் மண்ஜாடி மூடியின் கொண்டைப்பகுதி , சங்கு அறுத்து செய்த வளையல்கள் , அதற்கு பயன்படுத்திய சங்குகள் மற்றும் வட்ட சில்லுகள் , பலவண்ண கடற்பாசிகள் , ஒளி ஊடுருவாத கருப்பு நிற கண்ணாடி வளையல்கள் , பிற்காலத்திய நாயக்கர் கால செப்புக்காசு ஆகியன கிடைத்துள்ளன .


மேலும் 1.7 மீட்டர் அளவு விட்டமுடைய உறைகிணறு ஒன்றும் அண்மையில் இங்கு கண்டறியப்பட்டுள்ளது .

 

Tags :

Share via