இளம்பெண் எரித்துக்கொலை - இருவர் கைது

by Staff / 26-06-2024 11:40:28am
இளம்பெண் எரித்துக்கொலை - இருவர் கைது

மதுரை மாவட்டம்  மேல சக்குடி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வைஜயந்தி (28). இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். நிலையில் அவரைக் கடந்த 22ஆம் தேதி காணவில்லை என கணவர் அளித்த புகாரின் கீழ் சிலைமான் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே நேற்று வைஜயந்தியின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் வைகையாற்றுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டது.இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், வைஜயந்தியை எரித்து கொலை செய்த கொத்தனாராக பணிபுரியம் சிவகங்கை மாவட்டம் பீசர்பட்டணம் பகுதியைச் சேர்ந்த கருப்பையா மற்றும் அவரது நண்பர் மதுரை சின்ன உடைப்பு பகுதியைச் சேர்ந்த ஜெயகாந்தன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via