தமிழகத்தில் பூரண மதுவிலக்கே எங்களின் விருப்பம் அதற்கான சூழல் இல்லை அமைச்சர் முத்துசாமி

by Staff / 29-06-2024 05:21:30pm
தமிழகத்தில் பூரண மதுவிலக்கே எங்களின் விருப்பம் அதற்கான சூழல் இல்லை அமைச்சர் முத்துசாமி

தமிழ்நாட்டில் சட்டசபையில் இன்று மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன் போது அமைச்சர் முத்துசாமி பேசுகையில், “தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வர முடியுமா என்பது குறித்து சிந்தித்து பார்க்க வேண்டும், பூரண மதுவிலக்கு என்பதில் எங்களுக்கு விருப்பம் உள்ளது, ஆனால் அதற்கான சூழல் இல்லை. படிப்படியாக மதுக்கடைகளை குறைக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணமாக உள்ளது, ஒரு மதுக்கடையை மூடினால் மற்ற கடைகளில் வாங்கி மது அருந்துவார்கள்.” என்றார்.

 

Tags :

Share via