கள்ளச்சாராயம் விற்பனை - 410 பேர் கைது

by Staff / 15-05-2023 02:10:40pm
கள்ளச்சாராயம் விற்பனை - 410 பேர் கைது

கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக தமிழகம் முழுவதும் நடைபெற்ற அதிரடி சோதனையில் தற்போது 410 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ள நிலையில் 410 பேர் கள்ள சாராயம் விற்றுக் கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் மொத்தம் 8748 லிட்டர் கள்ளச்சாராயமும் 4720 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக டிஜிபி அலுவலகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags :

Share via