சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 314 வது பிறந்தநாள் விழா--1600 போலீசார் பாதுகாப்பு

by Editor / 11-07-2024 09:15:20am
சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 314 வது பிறந்தநாள் விழா--1600 போலீசார் பாதுகாப்பு

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 314 வது பிறந்தநாள் விழா - பலத்த போலீஸ் பாதுகாப்பு -1600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

*தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்  வீரன் அழகுமுத்துகோன் 314வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. அங்குள்ள நினைவு மண்டபத்தில் தமிழக அரசு சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி ஆகியோர் கலந்து கொண்டு வீரன் அழகுமுத்துக்கோன் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளனர். இதேபோன்று அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு மற்றும் மதிமுக, பாஜக, அமமுக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

விழாவை முன்னிட்டு  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் 4 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், ஒரு காவல் உதவி கண்காணிப்பாளர் உட்பட 17 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 52 காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் உட்பட தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 1600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

 

Tags : சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 314 வது பிறந்தநாள் விழா--1600 போலீசார் பாதுகாப்பு

Share via