துண்டு துண்டாக வெட்டி இளைஞர் படுகொலை

by Staff / 08-03-2024 12:09:52pm
துண்டு துண்டாக வெட்டி இளைஞர் படுகொலை

சென்னை பூந்தமல்லி அடுத்து நசரேத்பேட்டை ஆறுமுகம் தெருவைச் சேர்ந்தவர் கருக்கா என்ற ஸ்டீபன் ( 23 ). நேற்று இரவு காரில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் இவரை கடத்திச் சென்று, மாங்காடு அருகே காலி மைதானத்தில் வைத்து கத்தியால் கழுத்து, கை, தலை, கால் என பல இடங்களில் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்துள்ளது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via