புதுச்சேரிக்கு மதுபான பாட்டில்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து மதுபானங்களை அள்ளிச் சென்ற பொதுமக்கள்

by Editor / 19-06-2022 02:02:41pm
புதுச்சேரிக்கு மதுபான பாட்டில்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து மதுபானங்களை அள்ளிச் சென்ற பொதுமக்கள்

திருப்பத்தூரில் புதுச்சேரிக்கு மதுபான பாட்டில்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது கர்நாடகாவின்  மைசூரிலிருந்து பீர் பாட்டில்களை ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் வழியாக புதுச்சேரிக்கு லாரி சென்று கொண்டிருந்தது. கலைஞர் நகர் பகுதியில் இருந்த சாக்கடை கால்வாய் மழை நீரால் சூழப்பட்டிருந்த நிலையில் அதனை கவனிக்காத ஓட்டுநர் அதன் வழியாக லாரியை இயக்கியதால் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் லாரியில் இருந்து கீழே விழுந்த மதுபாட்டில்களை சிலவற்றை எடுத்து சென்றனர் பின்னர் மதுபாட்டில்கள் விபத்துக்குள்ளான லாரியில் இருந்து வேறு ஒரு லாரிக்கு மாற்றி புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 

Tags :

Share via