பெண் வெட்டி படுகொலை, கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில்மருத்துவமனையில்அனுமதி.

by Editor / 11-07-2024 09:17:16am
பெண் வெட்டி படுகொலை, கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில்மருத்துவமனையில்அனுமதி.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கச்சிராயன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே, புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த அழகு (60) மற்றும் பாப்புரம்மாள்(50) ஆகியோர் தங்கி இருந்து தென்னை விளக்குமாறு சேகரித்து மொத்தமாக சென்னைக்கு சென்று வியாபாரம் செய்யும் தொழில் செய்து வந்தனர்.

இந்நிலையில், கச்சிராயன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே, தலையில் வெட்டு காயங்களுடன் பாப்புரம்மாள் இறந்து கிடந்துள்ளார். மேலும் அவரது கணவர் அழகு தலை மற்றும் உடல் பகுதிகளில் வெட்டு காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்ததையடுத்து, இதுகுறித்து தகவலறிந்த கொட்டாம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அழகுவை மீட்டு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், உயிரிழந்த பாப்புரம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...

 

Tags : பெண் வெட்டி படுகொலை, கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில்மருத்துவமனையில்அனுமதி.

Share via