நீட் தேர்வு கேள்வித்தாள் கசிவு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

by Staff / 18-07-2024 10:37:25am
நீட் தேர்வு கேள்வித்தாள் கசிவு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகள் தொடர்பான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஜுலை 18) விசாரணைக்கு வருகிறது. உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காரணப் பட்டியலின்படி, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஜே.பி.பார்திவாலா, நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு 40க்கும் மேற்பட்ட மனுக்களை விசாரிக்கிறது. இதில் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) மனுவும் ஒன்று.

 

Tags :

Share via