ஆம்ஸ்ட்ராங் படுகொலை - தேமுதிக நகர செயலாளரிடம் விசாரணை

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவள்ளூர் நகர தேமுதிக செயலாளர் மணிகண்டன் மற்றும் ஜல்லிமேடு வேலாயுதம் உள்ளிட்ட 5 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ஹரிதரனிடம் மேற்கொண்ட விசாரணை அடிப்படையில் அவருடன் வழக்கறிஞர்களாக பணியாற்றியதால் விசாரணை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :