அவதூறு வழக்கு: சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி

by Staff / 26-07-2024 12:24:43pm
அவதூறு வழக்கு: சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி

உத்தரப்பிரதேசத்தின் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஜுலை 26) ஆஜரானார். 2018ஆம் ஆண்டில், மத்திய அமைச்சர் அமித் ஷா பற்றி ஆட்சேபனைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக ராகுல் மீது பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுலுக்கு கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் ராகுல் 5 மாத இடைவெளியில் 2வது முறையாக சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

 

Tags :

Share via