ஏரிக்கரையில் எரிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம்

by Editor / 26-07-2024 01:09:04pm
ஏரிக்கரையில் எரிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம்

ராசிபுரத்தை அடுத்த ஆா். பட்டணம் அருகேயுள்ள ஏரிக்கரை பகுதியில் எரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் சடலம் நேற்று  மீட்கப்பட்டது.ஆா். பட்டணம் ஏரிக்கரை பகுதியில் சுமாா் 25 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக அப்பகுதியினா் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனா். இதனையடுத்து அங்கு சென்ற ராசிபுரம் போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா்.

உயிரிழந்த பெண் அணிந்திருந்த நகைகள், கொலுசு, மெட்டி உள்ளிட்டவை அப்படியே உள்ளன. இவரை மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. உயிரிழந்த பெண் யாா்? இவரை கொலை செய்தவா்கள் யாா்? எதற்காக இந்த கொலை நடந்துள்ளது என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சம்பவ இடத்துக்கு நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ்கண்ணன் நேரில் வந்து விசாரணை நடத்தினாா்.

 

Tags :

Share via