உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பை குறி வைத்து ரஷ்யா பெரிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்
உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பை குறி வைத்து ரஷ்யா பெரிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலைநடத்தியுள்ளது. ரஷ்யா சுமார் 297 ட்ரோன்கள் மற்றும் 50 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதில் 274 ட்ரோன்கள் மற்றும் 33 ஏவுகணைகளை உக்ரைன் வான் பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்தியது
.தலைநகர் கியேவ் துறைமுக நகரமான ஒடெசா மற்றும் மத்திய உக்ரைனின் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக டினிப்ரோ, கிரோவோஹ்ராட், மைகோலைவ், பொல்டாவா மற்றும் சுமி ஆகிய பிராந்தியங்களும் இலக்காகின.
இந்தத் தாக்குதலால் கியேவ் பிராந்தியத்தில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் ஒரு குழந்தை உட்பட 8 பேர் இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டனர். எரிசக்தி நிலையங்கள் தவிர, குடியிருப்பு கட்டடங்கள் மற்றும் ரயில்வே வழித்தடங்களும் சேதமடைந்துள்ளன.
ஒடெசா பிராந்தியத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கள் அணைக்கப்பட்டன. ஆனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தாக்குதலின் விளைவாக கியேவ், ஒடெசா, டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் உள்ளிட்ட ஆறு பிராந்தி முழு ஆக்கிரமிப்பின் நான்காம் ஆண்டு நிறைவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி,ரஷ்யா ராஜதந்திரத்தை விட தாக்குதல்களிலேயே அதிக முதலீடு செய்கிறதுஎன்று விமர்சித்துள்ளார்.
Tags :


















