இளம்பெண் கழுத்தறுத்துக் கொலை

by Staff / 26-07-2024 02:40:06pm
இளம்பெண் கழுத்தறுத்துக் கொலை

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பெண்கள் தங்கும் விடுதியில் இளம்பெண்ணை கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்த் க்ருத்தி குமாரி 23 விடுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இரவு 11 மணிக்கு அந்த விடுதிக்கு கத்தியுடன் வந்த வாலிபர் ஒருவர் க்ருத்தியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via