திமுக, காங் இடையே மார்ச் 10ல் பேச்சுவார்த்தை

by Staff / 08-03-2024 02:03:33pm
திமுக, காங் இடையே மார்ச் 10ல் பேச்சுவார்த்தை

திமுக, காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக வரும் 10ஆம் தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. திமுக 8 சீட்டுகளை தர முன்வந்துள்ள நிலையில், காங்கிரஸ் 11 தொகுதிகளை கேட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது. நாளை மறுநாள் நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 9 அல்லது 10 தொகுதிகள் இறுதி செய்யப்படும் எனவும் தொகுதி பங்கீடு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் உடன் ராகுல்காந்தி தொலைபேசி வாயிலாக விரைவில் பேசுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via