ஆட்டோவில் பேட்டரி திருடிய கொள்ளையனை தர்ம அடி கொடுத்து போலீசாரடம் ஒப்படைத்த பொதுமக்கள்

by Editor / 30-06-2024 11:26:31pm
ஆட்டோவில் பேட்டரி திருடிய கொள்ளையனை தர்ம அடி கொடுத்து போலீசாரடம் ஒப்படைத்த பொதுமக்கள்

நாகர்கோவில் வைத்தியநாதபுரம் அருகே வட்டவிளை பகுதியில் ரோட்டோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ ஒன்றில் இன்று காலை மர்மநபர் ஒருவர் பேட்டரி திருட முயன்றார்.
இதை பொதுமக்கள் பார்த்த அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர். அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர். பின்னர் இது குறித்து கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பொதுமக்கள் பிடியிலிருந்து வாலிபரை மீட்டனர்.வாலிபரிடம் விசாரித்தபோது அவர் அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டின் முன்பகுதியில் தான் திருடிய பொருட்களை வைத்துள்ளதாக கூறினார்.போலீசார் அங்கு சென்று பார்த்தபோது பையில் பொருட்கள் இருந்தது. அந்த பையை போலீசார் பறிமுதல் செய்தனர். பையில் விளக்கு சாமிக்கு வைக்கப்படும் பொருட்கள்  உள்ளிட்டவை இருந்தது. இதைதொடர்ந்து பிடிப்பட்ட வாலிபரை கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை விசாரணை நடத்திய போது அவர் ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.மேலும் மீட்கப்பட்ட பொருட்கள் எங்கிருந்து கொள்ளையடிக்கப்பட்டது என்பது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் மது போதையில் இருந்ததால் அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

Tags : ஆட்டோவில் பேட்டரி திருடிய கொள்ளையனை தர்ம அடி கொடுத்து போலீசாரடம் ஒப்படைத்த பொதுமக்கள்

Share via