நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாகுபாடு - சித்தராமையா

by Staff / 15-08-2024 01:04:46pm
நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாகுபாடு - சித்தராமையா

நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாகுபாடு காட்டுவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மத்திய அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார். பெங்களூருவில் நடந்த சுதந்திர தின விழாவில் உரையாற்றிய சித்தராமையா, “சமூகநலத் திட்டங்களை மாநில அரசுகள் செயல்படுத்தும்போது தேவையான நிதி வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமை. மக்கள் தீர்ப்புக்கு எதிரான கொல்லைப்புற அரசியலை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். அரசியலமைப்பு கோட்பாடுகளை மத்திய அரசு புறக்கணிக்கிறது” என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via