"யாரையோ திருப்திபடுத்த இந்த கார் பந்தயம் நடந்துள்ளது"

by Staff / 02-09-2024 11:35:53am

திருவள்ளூரில் முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஃபார்முலா 4 கார் பந்தயம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “இந்த போட்டி தேவையில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியும், அதிமுகவினரும் குரல் எழுப்பினோம். யாரையோ திருப்திபடுத்துவதற்காக இந்த ஃபார்முலா-4 கார் பந்தயம் நடத்தப்பட்டுள்ளது. இனியாவது இந்த அரசு, யாருக்கும் பயன்படாத திட்டத்தை நடத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.
 

 

Tags :

Share via