ஸ்ரீ விஜயபுரமாக மாறுகிறது, அந்தமான் நிக்கோபார் தீவின் தலைநகர் போர்ட் பிளேயர்.

by Admin / 14-09-2024 12:09:02am
 ஸ்ரீ விஜயபுரமாக மாறுகிறது, அந்தமான் நிக்கோபார் தீவின் தலைநகர் போர்ட் பிளேயர்.

 

அந்தமான் நிக்கோபர் தீவுகளின் தலைநகராக இருக்கும் போர்ட் பிளேயர். பெயரை ஸ்ரீ விஜயபுரம் என்று மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தன்னுடைய எக்ஸ் பதிவில், பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் தேசத்தின் காலனி ஆதிக்க முத்திரை அகற்றப்பட்டு  போர்ட் பிளேயர். பெயரை ஸ்ரீ விஜயபுரம் என மாற்ற முடிவு செய்துள்ளதாகவும் முந்தைய காலனித்துவ பாரம்பரிய தொடர்பை கொண்டிருந்த பெயரை மாற்றி நம் சுதந்திர போராட்டத்தில் அடைந்த வெற்றியையும் தனித்துவத்தையும் குறிக்கும் விதமாக இப்பொழுது ஸ்ரீ விஜயபுரம் என்கிற பெயரை அந்தமான் நிக்கோபார் தீவுகளின் சரித்திரத்தில் எழுதப்பட்டுள்ளது. .இந்திய சுதந்திர போராட்டத்திலும் அதன் சரித்திரத்திலும் அந்த மான் நிக்கோபார் தீவிற்கு ஈடு இணையற்ற பங்களிப்பு உண்டு என்றும் இது முன்னொரு காலத்தில் சோழப்பேரரசின் கடற்படை தளமாக விளங்கிய பகுதி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 ஸ்ரீ விஜயபுரமாக மாறுகிறது, அந்தமான் நிக்கோபார் தீவின் தலைநகர் போர்ட் பிளேயர்.
 

Tags :

Share via