மருத்துவமனையில் பதுங்கி இருந்த மலைப்பாம்பு.

by Editor / 15-09-2024 05:59:46pm
 மருத்துவமனையில் பதுங்கி இருந்த மலைப்பாம்பு.

நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனையில் மலைப்பாம்பு ஒன்று இருப்பதாக  நாகர்கோவில் தீயணைப்பு படையினருக்கு தகவல் வந்தது. அதன் பெயரில் நாகர்கோவில் தீயணைப்பு படையினர் அந்த மருத்துவமனைக்கு சென்று பதுங்கி இருந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பிடிபட்ட பாம்பு சுமார் 8 அடி நீளம் கொண்டது. அந்த பாம்பை தீயணைப்பு படையினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அதனை வனப்பகுதியில் கொண்டு விட்டனர்..

 

Tags : மருத்துவமனையில் பதுங்கி இருந்த மலைப்பாம்பு

Share via