டெல்டா மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டம்

by Staff / 01-02-2024 12:08:27pm
டெல்டா மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டம்

கருகும் சம்பா பயிர்களை காப்பாற்ற மேட்டூர் அணையை உடன் திறக்க வலியுறுத்தி பிப்ரவரி 3ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார். சட்டவிரோதமாக நிர்வாக நடைமுறைக்கு புறம்பாக அத்துமீறி நீர்ப்பாசனத் துறையின் நிர்வாக அதிகாரத்தில் தலைமைச் செயலாளர் தலையிடுவது அதிகார அத்துமீறல் ஆகும். மேட்டூர் அணை தண்ணீரை திறக்க நீர்ப்பாசனத் துறை முன்வர வேண்டும் என வலியுறுத்தி சனிக்கிழமை காலை 9 மணி முதல் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஈடுபட உள்ளனர் என்றார்.

 

Tags :

Share via