இரு கல்லூரி மாணவர்களுக்கு இடையே தொடர்ந்து யார் பெரியவர் என்கிற நிலையில் மோதல்கள்

by Admin / 09-10-2024 03:03:27pm
இரு கல்லூரி மாணவர்களுக்கு இடையே தொடர்ந்து யார் பெரியவர் என்கிற நிலையில் மோதல்கள்

சென்னையில் மாநிலக் கல்லூரி -பச்சையப்பன் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு இடையில் ரூட் தல பிரச்சனை தொடர்ந்து நடந்து வருகின்றது. பேருந்து,, புறநகர்மின்சார ரயிலில் பயணிக்கும் இரு கல்லூரி மாணவர்களுக்கு இடையே தொடர்ந்து யார் பெரியவர் என்கிற நிலையில் மோதல்கள் வெடித்து வரும். கடந்த நாலாம் தேதி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்  சென்னை  மாநிலக் கல்லூரி மாணவன் சுந்தர் என்பவரை தாக்கியுள்ளனர்.. தாக்கப்பட்ட மாணவர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வந்த நிலையில்,  அவர் சிகிச்சை பலனின்றி உயிர்  இழந்ததை  தொடர்ந்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஈஸ்வர், சந்துரு ,ஹரி பிரசாத் ,கமலேஸ்வரர், யுவராஜ் கொலை முயற்சி வழக்காகபதிவு செய்யப்பட்டு  கைது செய்யப்பட்டிருந்தனர்,  இந்நிலையில்,  மாநிலக் கல்லூரி மாணவர் இறந்ததை தொடர்ந்து இவர்கள் மீது கொலை வழக்காக  பெரியமேடு  காவல்துறை  பதிவு செய்துள்ளது.. இதற்கிடையே மாநிலக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்இந்நிலையில்14 ,அக்டோபா் தேதி வரை  மாணவர்களுக்கு கல்லூாிநிர்வாகம் விடுமுறை அளித்தது .

 

Tags :

Share via