₹30 கோடி மதிப்புள்ள கேட்டமைன் போதைப் பொருள்கள் பறிமுதல்.

by Editor / 17-10-2024 09:59:36am
 ₹30 கோடி மதிப்புள்ள கேட்டமைன் போதைப் பொருள்கள் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் ஒரு வீட்டில் இருந்து ₹30 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செயயப்பட்டது. இது தொடர்பாக துரைப்பாண்டி என்பவர் கைது.50 கிலோ கஞ்சா செடியின் பிசினிலிருந்து தயாரிக்கப்படும் சாரஸ் போதை பொருள் மற்றும் ஐந்து கிலோ கேட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு 30 கோடி ரூபாய் என போலீஸார் தெரிவிக்கின்றனர். கடலோர காவல் நிலைய போலீசார் கைபற்றிய போதைப்பொருட்களை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.இந்த சம்பவம் குறித்து போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பிடிப்பட்டு வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

Tags : ₹30 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல்

Share via