இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க முயற்சி - ஆளுநர் பரபரப்பு பேச்சு

by Staff / 18-10-2024 05:01:12pm
இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க முயற்சி - ஆளுநர் பரபரப்பு பேச்சு

இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க கடந்த 50 ஆண்டுகளில் பலமுறை முயற்சி நடந்ததாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள டிடி தொலைக்காட்சி அலுவலகத்தில் இன்று நடந்துவரும் இந்தி தின விழாவில் உரையாற்றிய ஆளுநர், நாட்டின் பெருமைமிகு மாநிலமான தமிழ்நாட்டை எப்போதும் இந்தியாவில் இருந்து பிரிக்க முடியாது என்றார். மேலும், தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படவில்லை என்றும், தமிழ் மக்களிடம் இந்தி கற்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

 

Tags :

Share via

More stories