காற்றின்காரணமாக ஆந்திராவில் கரை ஒதுங்கிய விசைப்படகு .

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது உருவாகியுள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றிருந்த காசிமேட்டைச் சேர்ந்த பாலாஜி என்பவரது விசைப்படகு காற்றின் வேகமும், கடலின் சுழற்சியும் தாங்க முடியாமல் ஆந்திராவில் கரை ஒதுங்கியுள்ளது.திடீரென விசைப்படகு காற்றோட்டத்தின் விசையை தாங்க முடியாமல் தள்ளாடிய நிலையில், படகில் இருந்த மீனவர்கள் கடலில் குதித்து அருகாமையில் இருந்த விசைப்படகில் ஏறி தங்கள் உயிரை காப்பாற்றியுள்ளனர்.
Tags : காற்றின்காரணமாக ஆந்திராவில் கரை ஒதுங்கிய விசைப்படகு .